×

பள்ளி, கல்லூரிகளில் போதை தடுப்பு குழு

 

ராமநாதபுரம், ஜூலை 6: ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் நடக்கக் கூடிய மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று எஸ்.பி தங்கத்துரை தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எஸ்.பியிடம் அளித்தனர். மொத்தம் 43 மனுக்கள் பெறப்பட்டது.

அப்போது எஸ்.பி தங்கத்துரை கூறும்போது, மாவட்டத்திலுள்ள மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் போதை தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படாத பள்ளி,கல்லூரிகளில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள் தலைமையிலான குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

The post பள்ளி, கல்லூரிகளில் போதை தடுப்பு குழு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,The People Reducing ,Day ,Camp ,S.P. ,Addiction Committee at School and Colleges ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...